மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

இரு குழந்தைகளை எரித்துக் கொன்றதாயும் உயிரிழப்பு

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு குழந்தைகளை தீயில் எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த தாயும் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:05 am

DIN

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இரு குழந்தைகளை தீயில் எரித்துக் கொலை செய்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த தாயும் உயிரிழந்தாா்.

புது வண்ணாரப்பேட்டை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அன்சூா் (40), ஸ்டீல் வியாபாரி.

மனைவி ரிம்சிம் (27), குழந்தைகள் சித்தாரா (3), 8 மாத பெண் குழந்தை தானியாவுடன் வசித்து வந்தாா்.

வீட்டில் சனிக்கிழமை தனியாக இருந்த ரிம்சிம், சமையல் எரிவாயு உருளையை திறந்து தீ வைத்தாா். இதில் இரு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த ரிம்சிம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், குடும்பப் பிரச்னை காரணமாக இரு குழந்தைகளையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.