பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்னை மழை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image

காலை மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

Updated On :7 நவம்பர் 2021, 1:05 pm

DIN


சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய கனமழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்தது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தன. சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தன. 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மீண்டும் கனமழை முதல் தீவிர கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, மழை பாதிப்பைக் கண்காணிக்க சென்னையில் 15 மண்டலங்களுக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.