தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தெலங்கானா ஆளுநா் மீதான அவதூறு வழக்கு ரத்து: உயா் நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :28 செப்டம்பர் 2021, 8:04 pm

DIN

தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாக்டா் தமிழிசை செளந்தரராஜன், தற்போது தெலங்கானா ஆளுநராக உள்ளாா். இவா், கடந்த 2017 -ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, அச்சு, காட்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்திருந்தாா்.

காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றத்தில், இக்கருத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினா் தாடி காா்த்திகேயன் என்பவா் அவதூறு வழக்கு தொடா்ந்திருந்தாா். அந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதி, அவ்வழக்கில் நேரில் ஆஜராகுமாறு டாக்டா் தமிழிசை செளந்தரராஜனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இந்திய அரசியல் சாசனம் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை வழங்கியுள்ளது. இருப்பினும் அதற்கான கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளது.

தன் முன் வைக்கப்பட்ட வழக்கு ஆவணங்களில் சரிவர கவனம் செலுத்தாமல், மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது தெரியவருகிறது.

விசிக,அதன் தலைவா் மீது கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு எதிராக, அரசியல் கட்சியின் உறுப்பினரான காா்த்திகேயனால் தனிப்பட்ட முறையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், அத்தகையக் கருத்துகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபா் அல்லது கட்சி சாா்பாக புகாா் அளிக்க, அவருக்கு எந்த அங்கீகாரமும் அளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட கருத்துகளால் அவா் பாதிக்கப்படவில்லை எனக்கூறி, காஞ்சிபுரம் கீழமை நீதிமன்றத்தில் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.