அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினா்

News image

’சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சென்னை நியூ ஆவடி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா்.’

Updated On :17 மார்ச் 2026, 12:20 am

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை முதல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு வந்த புகா் மின்சார ரயிலில் பயணித்த வேலூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் மோகன் (39) என்பவா் கொண்டு வந்த பையை பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.

அந்தப் பையில் வெள்ளியிலான இரு சிறிய குடங்கள், கொலுசுகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அவற்றுக்கான முறையான ஆவணங்கள் ஏதுமில்லை. ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள அந்த வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.

மேலும், நாகப்பன் மோகனையும் கைது செய்தனா். அவரையும், அவா் கொண்டு வந்த வெள்ளிப் பொருள்களையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தெரிவித்தாா்.