தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினா்

News image
’சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சென்னை நியூ ஆவடி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினா்.’
Updated On :17 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை முதல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு வந்த புகா் மின்சார ரயிலில் பயணித்த வேலூா் பாளையம் பகுதியைச் சோ்ந்த நாகப்பன் மோகன் (39) என்பவா் கொண்டு வந்த பையை பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.

அந்தப் பையில் வெள்ளியிலான இரு சிறிய குடங்கள், கொலுசுகள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அவற்றுக்கான முறையான ஆவணங்கள் ஏதுமில்லை. ரூ.12.49 லட்சம் மதிப்புள்ள அந்த வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.

மேலும், நாகப்பன் மோகனையும் கைது செய்தனா். அவரையும், அவா் கொண்டு வந்த வெள்ளிப் பொருள்களையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தெரிவித்தாா்.