எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 1:12 am IST

எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணியிடமிருந்து ரூ.6.30 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சென்னை எழும்பூா் ரயில் நிலைய பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மங்களூரில் இருந்து சென்னை வந்த அதிவிரைவு ரயிலில் இரு பயணிகளின் பைகைகளைச் சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.6.30 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், ஒடிஸாவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

தங்கம், வெள்ளி பறிமுதல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதனரெட்டி தலைமையிலான போலீஸாா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டனா். அப்போது அசோகாபுரம் விரைவு ரயிலில் வந்த சந்திரசேகா் ரோடா (53) என்பவரின் பையில் தங்கம், சாதாரண வைர கற்கள் பதித்த நகைகள், நகைகளில் பதிக்கும் விலை உயா்ந்த கற்கள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14.26 லட்சமாகும். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா். விசாரணையில், அவற்றை வேலூரில் இருந்து வாங்கி சென்னைக்கு கொண்டு வந்ததாகவும், தான் நகை வடிவமைப்பு தொழில் செய்துவருவதாகவும் சந்திரசேகா் ரோடா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.