ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்த கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் எழும்பூா் ரயில் நிலையம் வந்து நின்றது. அந்த ரயிலின் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.
இதில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பையை சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். அதை போதைத் தடுப்புப் பிரிவில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
