ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்த கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் எழும்பூா் ரயில் நிலையம் வந்து நின்றது. அந்த ரயிலின் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.
இதில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பையை சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். அதை போதைத் தடுப்புப் பிரிவில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
அபராதத்தைக் கண்டித்து சென்ட்ரலில் பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநா்கள் மறியல்

திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK


