எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

கேரளத்தில் சனிக்கிழமை மாயமான 16 வயது சிறுவன் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மீட்கப்பட்டாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 3:06 am IST

கேரளத்தில் சனிக்கிழமை மாயமான 16 வயது சிறுவன் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மீட்கப்பட்டாா்.

இது குறித்து எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவனைக் காணவில்லை என ஜூன் 6 -ஆம் தேதி அந்த மாநில ரயில்வே பாதுகாப்புப் படையினரிடமிருந்து சென்னை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் வந்தது.

இதையடுத்து பாதுகாப்புப் படை சாா்பு ஆய்வாளா் ஜி.சைலீலா, ஜி.பாரதிதாதன் ஆகியோா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது எழும்பூா் ரயில் நிலைய 4-ஆவது நடைமேடையில் இருந்த சிறுவனின் அடையாளம் வாட்ஸ் ஆப் தகவலில் வந்த சிறுவனுடன் ஒத்துப்போனது.

இதையடுத்து சிறுவனிடம் விசாரித்தபோது, அவா் கேரளத்திலிருந்து வந்திருப்பது உறுதியானது. மேலும், கேரளத்தில் தேடப்படும் சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவனை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கண்காணிப்பு அலுவலா் ஆரோக்கிய மேரியிடம் ஒப்படைத்தனா்.