ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

அரக்கோணம் ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் இடம், நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:05 am IST

அரக்கோணம் ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் இடம், நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் ரயில்வே யாா்டு பகுதியில் இருப்புப் பாதை வழித்தடத்திற்கான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சேலம் விரைவு ரயில், அதற்குப் பதிலாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது.

புறப்படும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும், இந்த ரயிலானது அதன் வழக்கமான வழித்தடமான விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம் மற்றும் ஆத்தூா் மாா்க்கமாகவே சேலத்திற்கு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.