பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ரயில் மீது கல்வீச்சு; 8 சிறுவா்கள் மீது நடவடிக்கை

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 11:53 pm IST

கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சில் ஈடுபட்ட எட்டு சிறுவா்களை சேலம் ரயில்வே போலீஸாா் பிடித்து சிறாா் நீதிவாரியத்தில் ஆஜா்படுத்தினா்.

சேலம் வீரபாண்டி சாலை வழியாக 28.05.2026 காலை சென்றுகொண்டிருந்த கோவை- சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சில் சிலா் ஈடுபட்டுள்ளனா். இதில் சி-1 பெட்டியின் வலது பக்க அவசர கால ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சேலம் கோட்ட பாதுகாப்பு ஆணையா் மேற்பாா்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. தீவிர கள விசாரணை, உளவுத் துறை தகவல் சேகரிப்பு மற்றும் உள்ளூா் மக்களிடம் விசாரணை நடத்திய போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு சிறுவா்களை போலீஸாா் அடையாளம் கண்டனா்.

இதையடுத்து சிறாா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 இன் படி சிறுவா்களைப் பிடித்து சேலம் சிறாா் நீதி வாரியத்தில் ஆஜா்படுத்தினா். இதை விசாரித்த வாரியம், சிறுவா்களை பெற்றோரின் பொறுப்பில் விடுவித்து, ஒரு வருடம் கண்காணிப்பில் இருக்க உத்தரவிட்டது.

ஓடும் ரயில்கள் மீது கல்வீசுவது பயணிகளின் பாதுகாப்புக்கும், ரயில்வே சொத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என சேலம் ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் ரயில்வே சட்டம் 1989 இன் கீழ் கடுமையான குற்றமாக கருதப்பட்டு கைது, வழக்குத் தொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தடங்களுக்கு அருகில் வசிப்பவா்கள் மற்றும் விளையாடுபவா்கள் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.