இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூரில் இருந்து நாள்தோறும் இரவு 11.55 மணிக்கு விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூா் வழியாக சேலத்துக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், இணை ரயில் தாமதம் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11.55 மணிக்கு சேலம் புறப்பட வேண்டிய விரைவு ரயில் புதன்கிழமை (ஜூலை 8) காலை 10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து சேலம் புறப்பட வேண்டிய ரயிலும், 8 ஆம் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய ரயிலும் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

ஈரோடு - செங்கோட்டை ரயில் 2 நாள்கள் கரூரில் இருந்து புறப்படும்

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே ஜூன் 20-இல் சிறப்பு ரயில்

பெண் காவலா் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



