மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரயில் நிலையங்களில் ரூ.25.45 லட்சம் பறிமுதல்

சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25.45 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 10:04 pm

சென்னையில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.25.45 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

தோ்தலையொட்டி, சென்னையில் ரயில் நிலையங்களில் பணம், பரிசுப் பொருள்கள், தங்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையிலான போலீஸாா், பயணிகளை கண்காணித்து உடைமைகளை தீவிரமாகச் சோதனையிட்டனா். அப்போது, நான்காவது நடைமேடையில் நின்றிருந்த கஜனன் என்பவா் பையில் ரூ.23.50 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்துக்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் நடத்திய சோதனையில் சென்னை காா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜேசராம் என்பவரிடமிருந்து ரூ.1.95லட்சம் கைப்பற்றப்பட்டது.

இரு இடங்களில் கைப்பற்றப்பட்ட மொத்தம் ரூ.25.45 லட்சத்தை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். மேலும், தோ்தல் சிறப்பு பறக்கும் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.