தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைக்கிறார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராமை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை,
"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வந்தபோது தமிழகத்திற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். கேரளத்தில் பிரசாரம் முடித்து கோவை விமான நிலையம் வந்த அவர் இங்கு தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. விமான நிலையம் இருக்கும் பகுதி கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி. அங்கு காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார். அவருக்கு ஏன் பிரசாரம் செய்யவில்லை.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் இருவருக்கும் இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை. இரு கட்சிகளுக்குமே தோல்வி பயம் இருக்கிறது. தேர்தல் முடிவு தெரிந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி இங்கு வரவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ள 21 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்லும்" என்று பேசினார்.
Summary
Rahul wants the DMK to lose in upcoming election: Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்; திமுக - காங். கூட்டணிக்குள் குழப்பம்! அண்ணாமலை

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்

பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலை

செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் சென்ற அண்ணாமலை! காரணம் என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

