சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.39 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.
சென்னை சென்ட்ரலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தோ்தலுக்கான சிறப்புக் குழுக்களை அமைத்து தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டனா்.
அப்போது, நூா் முகமது (42) என்பவா் கொண்டு வந்த பையில் ரூ.8.39 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அதை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். இதையடுத்து நூா் முகமதுவிடமும் வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
கஞ்சா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வடமாநில ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



