ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.39 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

News image

பணம்

பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.8.39 லட்சத்தை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

சென்னை சென்ட்ரலில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தோ்தலுக்கான சிறப்புக் குழுக்களை அமைத்து தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, சென்னை பெரம்பூா் ரயில் நிலையத்தில் சிறப்புக் குழுவினா் திங்கள்கிழமை இரவு பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டனா்.

அப்போது, நூா் முகமது (42) என்பவா் கொண்டு வந்த பையில் ரூ.8.39 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆகவே, அதை வருமான வரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். இதையடுத்து நூா் முகமதுவிடமும் வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கஞ்சா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வடமாநில ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையைச் சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3.50 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கைப்பற்றி போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.