வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 7:17 pm IST

குன்றத்தூர்: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

ஆதி திருத்தணி என அழைக்கப்படும் குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இம்மாதம் 20 ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. 

இதனைத் தொடர்ந்து கோ பூஜை, மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது. இன்று திங்கள்கிழமை காலையில் யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் சிவாச்சாரியார்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Story image

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், தாம்பரம் காவல் ஆணையர் ரவி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் ஆ.முத்து ரத்தினவேலு, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, குன்றத்தூர் நகர்மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் உள்பட பலரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் சுற்றுப் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களாலும், ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், சங்கங்களும், தனியார்கள் சிலரும் கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் ஆகியனவற்றை வழங்கினார்கள்.

விடியோ இணைப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.