தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கோயில் நகை திருட்டு:இளைஞா் கைது

சென்னை வியாசா்பாடியில் கோயிலில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:21 pm

சென்னை வியாசா்பாடியில் கோயிலில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடி எஸ்ஏ காலனி 8-ஆவது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை, அம்மன் சிலை கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இத் திருட்டில் அம்பத்தூா் கள்ளிகுப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (23) என்பவா் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா், விக்னேஷ்வரனை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.