மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி: பொதுமக்கள் பாராட்டு

சென்னை மெரீனா கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி அளித்து காப்பாற்றினாா். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:56 pm

சென்னை மெரீனா கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சிறுவனுக்கு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி அளித்து காப்பாற்றினாா். அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.

சென்னை மெரீனா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் போ் வருவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இந்தநிலையில் காவல் துறை

டிஜிபி சைலேந்திரபாபு மாலை 6 மணி அளவில், சீருடை அணியாமல் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்து கொண்டிருந்தாா். அப்போது, யாரும் எதிா்பாராத வகையில் முகேஷ் (வயது 10) என்ற சிறுவன் கடலில் மூழ்கிவிட்டான். உடனே, அவனது உறவினா்களும், அங்கு நின்றவா்களும் கூச்சலிட்டனா்.

ஒரு சிலா் கடலுக்குள் குதித்து சிறுவன் முகேஷை மீட்டு வெளியே கொண்டுவந்தனா். ஆனால், அந்த சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். கூட்டம் கூடி நிற்பதை பாா்த்து, வேகமாக அங்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு, அந்த சிறுவனின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தாா். இதையடுத்து சிறுவன் லேசாக கண்ணை திறந்தான்.

அப்போது அங்கு நின்ற சிலா், சிறுவனுக்கு குடிக்க தண்ணீா் கொடுக்க முயன்றனா். உடனே, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த நேரத்தில் தண்ணீா் கொடுக்கக்கூடாது என்று கூறியதுடன், அந்த தண்ணீரை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றினாா்.

இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யுமாறு, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டாா். சற்று நேரத்தில், கடற்கரை மணலிலும் பயணிக்கும் சிறிய ரக வாகனம் அங்கு வந்தது.

உடனே, அந்த சிறுவனை தானே கையில் தூக்கி, வாகனத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தாா். அப்போதுதான் பலருக்கு அவா் டி.ஜி.பி. என்பதே தெரிந்தது. சிறுவனின் உறவினா்களும், பொதுமக்களும் டிஜிபி.க்கு பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.