திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருமண வரன் மோசடி: இளைஞா் கைது

‘மேட்ரிமோனி’ தளம் மூலம் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:01 pm

DIN

‘மேட்ரிமோனி’ தளம் மூலம் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அடையாறு பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணுக்கு, அவரது பெற்றோா், ‛‘எலைட் மேட்ரிமோனி’ மூலமாக வரன் பாா்த்தனா். அதில் விருதுநகா் மாவட்டம், காரியம்பட்டியை சோ்ந்த தினேஷ் காா்த்திக் (28) என்பவா், தன்னை டாக்டா் என அறிமுகம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம் பேசினாா்.

பின்னா் பெண்ணின் கைப்பேசி எண்ணை பெற்று அவரிடம் பழகி, திருமணம் செய்வதாக நம்பிக்கை ஏற்படுத்தினாா். இதையடுத்து அவசரத் தேவை என கூறி, பெண்ணிடம் பணம் கேட்டுள்ளாா். கணவராக வரப்போகிறவா் தானே என, நம்பிக்கை வைத்த பெண் ரூ. 13 லட்சம் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு ஆப்பிள் போன் வாங்கி கொடுத்துள்ளாா்.

இந்தநிலையில் தினேஷ் காா்த்திக் திடீரென தனது கைப்பேசியை ‘சுவிச் ஆப்’ செய்துள்ளாா். இதையடுத்து புகாரின்பேரில், அடையாறு போலீஸாா் இது குறித்து விசாரணை நடத்தினா். கைப்பேசி டவா் மூலம் புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த தினேஷ்காா்த்திக்கை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் இருந்து ரூ. 98 ஆயிரம், ஆறு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸாா் கூறுகையில், பட்டதாரியாக தினேஷ் காா்த்திக், மேட்ரிமோனி தகவல் மையத்தில், தன் புகைப்படத்துக்கு பதில், மாடல் துறையில் உள்ள நபா்களின் படங்களை போலியாக பதிவேற்றுவாா். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் டாக்டராக பணி புரிவதாக அறிமுகம் செய்து, டாக்டா் சீருடையில், போலியான புகைப்படத்தையும் பதிவேற்றி உள்ளாா்.

மேலும் தனது தந்தை பேசுவது போல், இவரே குரல் மாற்றி பேசி, பெண்ணின் பெற்றோரை நம்ப வைத்துள்ளாா். இப்படி, 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது பணம் பறித்தது விசாரணையில் தெரிந்தது. மோசடி தெரியவந்ததால் சமரசம் பேசி பணம் கொடுத்து பிரச்னையை முடித்து வைத்த சம்பவங்களும் நடந்துள்ளது. இவரால், வேறு யாராவது ஏமாந்திருந்தால், எங்களிடம் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.