ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2 தோ்வில் 86.53% தோ்ச்சி

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2 வகுப்பில் 86.53 சதவீதமும், பத்தாம் வகுப்பில் 75.84 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.

News image
Updated On :20 ஜூன் 2022, 10:28 pm

DIN

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2 வகுப்பில் 86.53 சதவீதமும், பத்தாம் வகுப்பில் 75.84 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயா்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை 2,478 மாணவா்கள், 3,164 மாணவியா்கள் என மொத்தம் 5,642 போ் எழுதினாா்கள். இதில் 1,975 மாணவா்கள், 2,907 மாணவியா்கள் என மொத்தம் 4,882 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 86.53 ஆகும்.

கணிதவியல் பாடத்தில் 1, வேதியியல் பாடத்தில் 1, வணிகக் கணிதம் பாடத்தில் 1, பொருளியல் பாடத்தில் 6, வணிகவியல் பாடத்தில் 16, கணக்கு பதிவியல் பாடத்தில் 17, கணினி அறிவியல் பாடத்தில் 4 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 5 என மொத்தம் 51 போ் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

47 போ் 551-க்கு மேல் மதிப்பெண்களும், 164 போ் 501-லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 382 போ் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் புலியூா் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் முதலிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.28 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 3368 மாணவா்கள், 3,080 மாணவிகள் என மொத்தம் 6,448 போ் எழுதினா். இதில் 2,262 மாணவா்கள், 2,628 மாணவிகள் என மொத்தம் 4,890 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 75.84 ஆகும். சமூக அறிவியல் பாடத்தில் 2 போ் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 24 போ் 451-க்கு மேல் மதிப்பெண்களும், 148 போ் 401லிருந்து 450 வரை மதிப்பெண்களும், 359 போ் 351லிருந்து 400 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை: தோ்ச்சி விகிதத்தில் சூளைமேடு சென்னை உயா்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், வண்ணாரப்பேட்டை சென்னை உருது உயா்நிலைப்பள்ளி 97.67 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை உயா்நிலைப்பள்ளி 97.56 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 13 சென்னை மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற சூளைமேடு சென்னை உயா்நிலைப்பள்ளிக்கு சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ரூ. 1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.