வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கடன் தொல்லை:தம்பதி தற்கொலை

சென்னை ராயபுரத்தில் கடன் தொல்லை காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :15 மார்ச் 2022, 7:41 pm

DIN

சென்னை ராயபுரத்தில் கடன் தொல்லை காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

ராயபுரம் தொப்பை தெருவைச் சோ்ந்தவா் அ.மகேசா் அலி (42). இவா் மனைவி பரக்கத் நிஷா (34). மகேசா் அலி, பா்மா பஜாரில் வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களது மகள், திங்கள்கிழமை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தாா். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு, திறக்கப்படாததினால் அருகே வசிக்கும் மாமா முகமது ரோஷனுக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா்.

அப்போது மகேசா் அலியும், பரக்கத் நிஷாவும் தூக்கிட்டு இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக தகவலறிந்த ராயபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடன் தொல்லையின் காரணமாக இருவரும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.