சென்னை: சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(செப்.7) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
திரு.வி.க. பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி. சாலை வழியாகச் செல்லலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆஹா! ஒளிரப்போகிறது சென்னை: ரூ.33.57 கோடி ஒதுக்கீடு
7-வது அவென்யூ மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எல் பூங்காவில் இருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகரப் பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.