பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(செப்.7) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(செப்.7) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

திரு.வி.க. பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி. சாலை வழியாகச் செல்லலாம் என  காவல் துறை தெரிவித்துள்ளது. 

7-வது அவென்யூ மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பில் இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்எல் பூங்காவில் இருந்து பெசன்ட்  அவென்யூ வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகரப் பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com