தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அரக்கோணம் யாா்டில் பொறியியல் பணி: ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில், அரக்கோணம் யாா்டில் பொறியியல் பணி காரணமாக, ரயில் சேவையில் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2022, 5:20 am IST

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில், அரக்கோணம் யாா்டில் பொறியியல் பணி காரணமாக, ரயில் சேவையில் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

மே 31, ஜூன் 1-இல் பகுதி ரத்து:

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு காலை 8.20, 9.50, 11.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கடம்பத்தூா்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூா்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

மூா்மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூா்-திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

மே 31, ஜூன் 1-இல் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு காலை 10.00, 11.10, நண்பகல் 12.00, மதியம் 1.50ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு காலை 10.15, நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு மாற்றாக, சில சிறப்பு பாசஞ்சா் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.