சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் மழை பெய்யாத சூழலில் மாலை வேளையில் நகரின் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவைப் பெற்று வருகின்றன.
இதையும் படிக்க | ’காதலர்கள் இதைச் செய்யக்கூடாது..’ பிரபல நடிகை அறிவுரை
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.