கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னை மீனம்பாக்கத்தை வறுத்தெடுக்கும் வெயில்

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருந்துவரும் நிலையில், இந்த ஆண்டும் அதுபோல கோடை வெப்பம் கொளுத்தத் தொடங்கிவிட்டது.

News image
சென்னை மீனம்பாக்கத்தை வறுத்தெடுக்கும் வெயில்
Updated On :15 ஏப்ரல் 2023, 6:42 am

DIN


சென்னை: சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருந்துவரும் நிலையில், இந்த ஆண்டும் அதுபோல கோடை வெப்பம் கொளுத்தத் தொடங்கிவிட்டது.

அதிலும் சென்னையில் குறிப்பாக நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. முற்பகல் 11 மணிக்கு மேல் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை நீடிக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று நுங்கம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இது பதிவாகியிருக்கிறது.

அதேநேரத்தில், இது ஏப்ரல் மாதத்தில் நிலவும் வெப்பநிலையைக் காட்டிலும் 2 அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்திருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்குதிசையிலிருந்து வரும் காற்று குறைந்திருப்பதே இந்த அளவுக்கு வெப்பம் அதிகரித்திருக்கக் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில், வரும் வாரங்களில் சென்னையில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.