தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரயாக்ராஜ்-கோவை முன்பதிவில்லா சிறப்பு ரயில்: இன்று தமிழகம் வந்தடையும்

பிரயாக்ராஜ் முதல் கோவை வரை இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஜன.28) தமிழகம் வந்தடையும் என தெற்கு ரயில்வே

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:22 pm

DIN

பிரயாக்ராஜ் முதல் கோவை வரை இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஜன.28) தமிழகம் வந்தடையும் என தெற்கு ரயில்வே

தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜிலிருந்து வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்ட முன்பதில்லா சிறப்பு ரயில் (வண்டி எண்: 04145) சனிக்கிழமை (ஜன.28) பகல் 1 மணிக்கு காட்பாடி வந்தடையும். பின் அங்கிருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மாலை 6.30 மணிக்கு கோவை சென்றடையும்.

இதில் ரயிலில் 18 முன்பதிவில்லா பெட்டிகளும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் உள்ளதாக தெற்கு ரயில்வே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.