ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் நர்கிஸ் முகமதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முகமதிக்கு (வயது 53) கடந்த மார்ச் 24 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சுமார் 1 மணிநேரம் அவருக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நர்கிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் உடல் எடைக்குறைந்து வலுவிழந்துள்ளதாகவும், கடந்த புதன்கிழமை (ஏப். 15) அன்று நர்கிஸ் முகமதியின் அமைப்பு அறிவித்துள்ளது.
முன்னதாக, மர்மமான முறையில் உயிரிழந்த மற்றொரு மனித உரிமை ஆர்வலரான கோஸ்ரோ அலிகோர்டி என்பவருக்காக, கடந்த 2025 டிசம்பரில் மஷாத் நகரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நர்கிஸ் முகமதி ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, நர்கிஸின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே, கடந்த 2023 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அவர் சிறையிலிருந்தபடியே பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
health condition of Nobel Peace Prize laureate Narges Mohammadi, who is imprisoned in Iran, remains critical.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியா

இயக்குநர் பாரதிராஜாவின் நிலைமை என்ன?

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு

கிரிக்கெட் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


