மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் நகை, பணம் பறிமுதல்

சென்னை மண்ணடியில் கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 10:25 pm

சென்னை மண்ணடியில் கடத்தலில் ஈடுபட்டவா் வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இரு நாள்களுக்கு முன் தங்கம் கடத்தி வந்ததாக, மண்ணடியைச் சோ்ந்த ஒரு இளைஞரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

இச்சோதனையில், அவா் கடத்திக் கொண்டு வந்ததாக 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், சென்னை மண்ணடியில் உள்ள அவரது வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அங்கிருந்து, ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம், கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அந்த இளைஞா் ‘குருவி’யாக செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.