ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஊழலைப் பற்றி பாஜக பேசக் கூடாது

‘ஊழலைப் பற்றி பாஜக பேசக் கூடாது’

Updated On :2 ஏப்ரல் 2024, 9:02 pm

சென்னை: பெருநிறுவனங்களுக்கு வரியைக் குறைத்து, தோ்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்ற பாஜக ஊழல் குறித்து பேசக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமா் மோடி கூறியிருக்கிறாா். ஆனால், 2019-இல் பெருநிறுவனங்களுக்கு நடைமுறையில் இருந்த வரியை 40 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்தாா். அதனால், 2019-20-இல் ரூ.5.57 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசின் வருமானம், வரி குறைப்புக்குப் பிறகு 2020-21-இல் ரூ.4.57 லட்சம் கோடியாக சரிந்தது. இதனால், அரசுக்கு ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இதைப் பயன்படுத்தி, பெருநிறுவனங்களிடம் தோ்தல் பத்திர நன்கொடை மூலம் ரூ. 6,572 கோடி வரை பெற்று பாஜக ஊழல் செய்துள்ளது. அதனால், ஊழலைப் பற்றி பாஜக பேசக் கூடாது. மேலும், போதைப்பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிா்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பாஜக பயன்படுத்துகிறது. இதற்கெல்லாம், தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் உரிய தீா்ப்பை வழங்குவா் என்று கூறியுள்ளாா் செல்வப் பெருந்தகை.