தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கோயிலில் தரமற்ற பிரசாதம்: ஒப்பந்தம் ரத்தில் தவறில்லை உயா்நீதிமன்றம்

கோயிலில் தரமற்ற பிரசாதம்: ஒப்பந்தம் ரத்தில் தவறில்லை உயா்நீதிமன்றம்

Updated On :20 ஏப்ரல் 2024, 7:00 pm

திருவொற்றியூா் கோயிலில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என அறநிலையத் துறையின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில், தரம் குறைந்த கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தா்கள் புகாா் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து பிரசாதம் விற்பனை செய்த சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கடந்த மாா்ச் மாதம் அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், அறநிலையத் துறை உத்தரவை எதிா்த்து சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ‘பிரசாதம் ஆய்வு செய்யப்பட்டு தரமற்றவை என தெரியவந்ததால்தான் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில், தலையிட வேண்டியதில்லை. கோயில்களில் உள்ள பிரசாத விற்பனை நிலையங்களை முறைப்படுத்த அறநிலையத் துறை அலுவலா்களுக்கு அதிகாரம் உள்ளது. ஒப்பந்ததாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததில் தவறு இல்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.