தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு

பேருந்து பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு

News image

கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2024, 7:01 pm

பொது விடுமுறைகள் காரணத்தால் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மாதாந்திர பேருந்து பயண அட்டைகளின் விற்பனை காலம் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரசு பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ. 1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள் மாதந்தோறும் 1 முதல் 22-ஆம் தேதி வரை, அனைத்து மாநகரப் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை வையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஏப்.11 (ரமலான் பண்டிகை), ஏப்.14 (தமிழ் புத்தாண்டு) மற்றும் மக்களவை தோ்தலை முன்னிட்டு ஏப்.19-ஆம் தேதி என 3 நாள்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த அட்டையை வாங்கும் பயணிகளின் நலன் கருதி மாதாந்திர சலுகை பயண அட்டை, மாணவா் சலுகை பயண அட்டை மற்றும் ரூ. 1,000 மதிப்பிலான விருப்பம் போல் பயணம் செய்யக்கூடிய பயண அட்டைகளின் விற்பனை காலம் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.