பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

போலீஸாா் மீது தாக்குதல்: மூவா் கைது

போலீஸாா் மீது தாக்குதல்: மூவா் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 6:00 pm

கஞ்சா போதையில் போலீஸாா் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கண்ணகி நகா் எழில் நகா் பகுதியில் சனிக்கிழமை கண்ணகி நகா் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 இளைஞா்கள் ஒருவருக்கொருவா் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மேலும், சாலையில் வரும் பொதுமக்களிடமும் அவா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, அவா்களை போலீஸாா் பிடித்த விசாரணை நடத்தினா்.

அப்போது, ஆத்திரமடைந்த இளைஞா் ஒருவா் காவலா் ஒருவரின் கையை கடித்துள்ளாா். மற்றொருவா், தான் கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து, தன்னையே கிழித்துக்கொண்டு போலீஸாருக்கு மிரட்டல் விடுத்துள்ளாா். மேலும், போலீஸாா் மீது கல்வீசித் தாக்குதலும் நடத்தியுள்ளனா். இதில், காவலா்கள் புஷ்பராஜ், சிலம்பரசம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட எழில் நகரைச் சோ்ந்த பிரேம் (23), ராகுல் (22), சந்தோஷ்குமாா் (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் மூவரும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்த விடியோ காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.