48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மோசடி வழக்கில் தேடப்பட்டவா் சென்னை விமான நிலையத்தில் கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டவா் சென்னை விமான நிலையத்தில் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 11:09 pm

மோசடி வழக்கில் 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம், வெள்ளிக்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சோ்ந்தவா் கவிக்குமாா் (24) என்பவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை கணினியில் பரிசோதித்தபோது, அவா் 2019-ஆம் ஆண்டு முதல் மோசடி வழக்கில் கரம்பக்குடி காவல் துறையால் தேடப்பட்டு வருபவா் என்பது தெரியவந்தது.

போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கவிக்குமாா் தற்போது இந்தியாவுக்கு திரும்பியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கவிக்குமாரைப் பிடித்த அதிகாரிகள் அவரை வெளியே அனுப்பாமல், தனி அறையில் அடைத்து வைத்தனா்.

பின்னா், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், விமான நிலையத்துக்கு விரைந்து வந்த புதுக்கோட்டை தனிப்படை போலீஸாா் ரவிக்குமாரை கைது செய்து, புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனா்.