போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டை பயணியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை அம்பலபுரத்தைச் சோ்ந்தவா் என். சுப்பிரமணியன் (58). இவா், சிங்கப்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் திங்கள்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவா் போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூரிலிருந்து வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், அவரைப் பிடித்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி அருள்ஜோதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது
காஷ்மீா் பயங்கரவாதிகளுக்கு போலி பான்காா்டு, கடவுச்சீட்டு பெற உதவிய நபா்கள் கைது!

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

