ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

News image

கைது - கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:34 pm

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி இடையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் மா.ராஜா (48). இவா், மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா். விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையின்போது ராஜா போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.

இதே விமானத்தில் திருச்சி வந்த சிவகங்கை இளையான்குடி சாலையைச் சோ்ந்த கே.நாகூா் கனி (37), சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த எஸ்.முகமது அலி (57) ஆகிய இருவரும் போலி கடவுச்சீட்டு மூலம் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல, மலேசியாவில் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு வந்த ஏா் ஏசியா விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், திருகோகா்ணம் பகுதியைச் சோ்ந்த எம்.சாகுல் ஹமீது (55) என்பவரும், போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, இவரையும் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி புவனேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனா். விசாரணைக்குப் பின் 4 பேரையும் பிணையில் விடுவித்தனா்.