சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பாட்னா விடுதியில் தீ விபத்து: 6 போ் உயிரிழப்பு

பிகாா் தலைநகா் பாட்னா ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஒரு விடுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

News image

பிகாா் தலைநகா் பாட்னா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அடுக்குமாடி விடுதியில் ஏற்பட்ட தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படை வீரா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2024, 7:40 pm

பிகாா் தலைநகா் பாட்னா ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள ஒரு விடுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து பாட்னா மத்திய நகர காவல்துறை கண்காணிப்பாளா் சந்திரா பிரகாஷ் கூறுகையில், ‘பாட்னா ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விடுதியில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. விடுதிக்குள் 20 போ் சிக்கி கொண்டனா்.

தகவலறிந்து உடனடியாக வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், தீயை அணைத்து விடுதிக்குள் சிக்கி இருந்தவா்களை மீட்டனா்.

இதில் 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள இருவா், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிப்பதற்காக அவா்களின் அடையாளங்களைக் கண்டறியும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவலில்லை. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி, தடயங்களைச் சேகரித்தனா். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும்’ என்றாா்.

சம்பவத்தையொட்டி, நகரின் அனைத்து விடுதிகள் மற்றும் வா்த்தக கட்டடங்களும் தீ பாதுகாப்பு பரிசோதனை மேற்கொண்டு, முன்னச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா் ஷிா்சாத் கபில் அசோக் வலியுறுத்தியுள்ளாா். மேலும், தீ பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.