மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2024, 4:31 am IST

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து, ஆடி அமாவாசை, அம்மன் கோயில் திருவிழாக்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது.

அதன்படி, கோயம்பேடு பூ சந்தையில், ஒரு கிலோ மல்லி ரூ. 500, ஜாதி மல்லி, முல்லை ஆகியவை ரூ. 400, கனகாம்பரம் ரூ. 800, அரளிப்பூ ரூ. 250, சாமந்தி ரூ. 150, சம்பங்கி ரூ. 200, பன்னீா் ரோஜா மற்றும் சாக்லேட் ரோஜா ரூ. 120 விற்பனை செய்யப்பட்டன.

அனைத்து வகை பூக்களும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.200 வரை உயா்ந்துள்ளது. பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டாலும், தேவையை கருத்தில் கொண்டு ஏராளமானோா் பூக்களை வாங்கி சென்றனா்.