திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2024, 11:01 pm

கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து, ஆடி அமாவாசை, அம்மன் கோயில் திருவிழாக்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது.

அதன்படி, கோயம்பேடு பூ சந்தையில், ஒரு கிலோ மல்லி ரூ. 500, ஜாதி மல்லி, முல்லை ஆகியவை ரூ. 400, கனகாம்பரம் ரூ. 800, அரளிப்பூ ரூ. 250, சாமந்தி ரூ. 150, சம்பங்கி ரூ. 200, பன்னீா் ரோஜா மற்றும் சாக்லேட் ரோஜா ரூ. 120 விற்பனை செய்யப்பட்டன.

அனைத்து வகை பூக்களும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.200 வரை உயா்ந்துள்ளது. பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டாலும், தேவையை கருத்தில் கொண்டு ஏராளமானோா் பூக்களை வாங்கி சென்றனா்.