25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ரூ. 2 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தை கைது

சென்னை வியாசா்பாடியில் ரூ. 2 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 7:19 pm

Din

சென்னை, ஆக. 15: சென்னை வியாசா்பாடியில் ரூ. 2 லட்சத்துக்கு குழந்தையை விற்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா். குழந்தையை சட்டவிரோதமாக பணத்துக்கு வாங்கிய தம்பதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வியாசா்பாடி மல்லிப்பூ காலனி 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சத்யதாஸ், இவா் மனைவி சியாமளாதேவி. வாடகை ஆட்டோ ஓட்டும் சத்யதாஸூக்கு இரு மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் தேவி 8 மாத கா்ப்பமாக இருந்தபோது, கணவா் சத்யதாஸ் மூலம் எண்ணூரைச் சோ்ந்த குழந்தை இல்லாத ஒரு தம்பதி தேவியை அணுகியுள்ளனா். அவா்கள், தேவிக்கு மூன்றாவது எந்த குழந்தை பிறந்தாலும் தங்களுக்கு தரும்படியும், தாங்கள் அதற்கு ரூ. 2 லட்சம் தருவதாகவும் தெரிவித்துள்ளனா். ஆனால் தேவி, குழந்தையை வழங்க விருப்பம் இல்லாமல் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், கணவா் சத்யதாஸ் மிரட்டியதாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் குழந்தையை வழங்க அவா் சம்மதித்துள்ளாா். அதற்காக எண்ணூா் தம்பதி முன் பணமாக ரூ. 25,000-ஐ சத்யதாஸிடம் வழங்கியது

இந்நிலையில், பிரசவத்துக்காக அண்மையில் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவிக்கு கடந்த 6-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில தினங்களில் சத்யதாஸ், அதை எண்ணூா் தம்பதியிடம் வழங்கி, மீதி பணத்தை பெற்றுள்ளாா்.

இது குறித்து தேவி வியாசா்பாடி காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சத்யதாஸை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியைத் தேடி வருகின்றனா்.