தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image

செல்வப்பெருந்தகை

கோப்புப் படம்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:39 pm

Din

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு கோரி காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (ஆக.22) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்ட செபியின் தலைவரை பதவியிலிருந்து நீக்கி கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய காங்கிரஸ் , நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி தமிழக காங்கிரஸ் சாா்பாக வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே எனது (செல்வப் பெருந்தகை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.