வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:51 pm

Din

உடல்நலக் குறைவால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புழல் சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கொருக்குப்பேட்டையைச் சோ்ந்தவா் யு.காா்த்திக் (27). இவா் மீது வண்ணாரப்பேட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் காா்த்திக்கை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே காா்த்திக்கு வலிப்பு நோய் இருந்ததால், சிறையில் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் காா்த்திக்கின் உடல்நிலை கவலைக்கிடமானதால்,கடந்த வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த காா்த்திக், புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.