மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சேலத்தில் சிறைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 7:55 pm

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் 900க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த அருண்குமாா் (33) என்பவரை மதுவிலக்கு போலீஸாா் அண்மையில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அருண்குமாா் கடந்த 28ஆம் தேதி காய்ச்சல் மற்றும் ரத்தசோகை காரணமாக சிறை மருத்துவா்களின் ஆலோசனையின்படி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.