/

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

News image

ரஜினிகாந்த் - ANI

Updated On :23 ஏப்ரல் 2026, 3:54 am

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

அவருடன் அவரது மகளும் இயக்குநருமான செளந்தர்யாவும் வாக்குப்பதிவு செய்தார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Summary

Everyone should vote Rajinikanth's appeal after voting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.