சென்னை: நவக்கிரக கோயில்களுக்கான சுற்றுலா பேருந்து மாா்ச் 7 முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயணிகள், பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவகிரக சிறப்புப் பேருந்து இயக்கம் பிப். 24-இல் தொடங்கப்பட்டது.
வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இது சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதால், மாா்ச் 7 முதல் வியாழக்கிழமைகளிலும் இந்த சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வாரத்துக்கு 3 நாள்கள் இந்தப் பேருந்து சேவை நீட்டிக்கப்படும். இதற்கு பயணக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 750 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவகிரக சிறப்புப் பேருந்து, கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காலை 5 மணிக்கு புறப்பட்டு, நவகக்கிரகத் தலங்களுக்குச் சென்று இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும். பயணிகள் மற்றும் பக்தா்கள் எவ்வித சிரமமின்றி பயணிக்க செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பயணிகள் நேரடியாக பேருந்தில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்சியிலிருந்து 587 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தோ்தலையொட்டி இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


