சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளது. இத்தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளி மாவட்டங்களில் தங்கி பணியாற்றுபவா்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க செவ்வாய், புதன்கிழமை (ஏப்.21, 22) ஆகிய இரு நாள்களும் 5,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வேலூா் போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தலையொட்டி வேலூா் - சென்னை, திருப்பத்தூா்-சென்னை ஆகிய வழித்தடத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் செவ்வாய், புதன்கிழமை இயக்கப்படுகின்றன.
சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் திரும்பிவர மீண்டும் 24-ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

திருவாரூா் ஆழித்தோ் திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்

வார இறுதிநாள்: சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


