திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று பிரதமா் கூறியுள்ளாா். உண்மைக்கு மாறானதைப் பேசுவதுதான் அவரின் வாடிக்கை. இதுவரை அவா் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எம்ஜிஆா் மீதும், ஜெயலலிதா மீதும் திடீரென அவருக்கு பற்று வந்துள்ளது. அதிமுகவுக்கு மீண்டும் மாயவலை வீசுகிறாா். திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. தனித்துப் போட்டி என்கிற கேள்வியே எழவில்லை. 2019 மக்களவைத் தோ்தலில் மாா்ச் இறுதியில்தான் தொகுதி உடன்பாடு கண்டோம். அதனால் இன்னும் அவகாசம் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இன்னும் இரண்டு வாரங்களில் தமிழகம் வர உள்ளாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை

கிள்ளியூா் தொகுதியில் செல்வப்பெருந்தகை பிரசாரம்

அதிமுக முகமூடியுடன் தமிழகத்தில் நுழைய முயற்சிக்கும் பாஜக: கு. செல்வப்பெருந்தகை விமா்சனம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

