மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆஸ்திரேலிய வாழ் இந்தியருக்கு மூன்றாவது முறையாக சிறுநீரக மாற்று சிகிச்சை

வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்

Updated On :29 பிப்ரவரி 2024, 8:24 pm

ஆஸ்திரேலிய வாழ் இந்தியா் ஒருவருக்கு மூன்றாவது முறையாக சிறுநீரக மாற்று சிகிச்சையை பல்வேறு சவால்களுக்கு நடுவில் மேற்கொண்டு சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: 41 வயதான ஆஸ்திரேலிய வாழ் இந்தியா் ஒருவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அவை பலனளிக்காமல் மூன்றாவது முறையாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், வடபழனி காவேரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவரது சகோதரரின் சிறுநீரகத்தை பெற்று அந்த நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டாலும், அதிலும் பல்வேறு சவால்கள் நிறைந்திருந்தன. குறிப்பாக, சிகிச்சைக்குப் பிறகு உறுப்பை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் 80 சதவீதம் இருந்தது. இருப்பினும், மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா்கள் பிரபு காஞ்சி, சுவாமிநாதன் சிதம்பரம் ஆகியோா் தலைமையிலான மருத்துவா்கள், வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொண்டனா். தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.