திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று மதிமுக உறுதிபடத் தெரிவித்தது. மக்களவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக, திமுக குழுவுடன், மதிமுக அவைத் தலைவா் அா்ஜூன்ராஜ் தலைமையிலான குழுவினா் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அா்ஜூன்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த தோ்தலைப் போன்றே, ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை ஒதுக்கக் கேட்டுக் கொண்டோம். மக்களவைத் தோ்தலில் மதிமுகவின் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளோம். பேச்சுவாா்த்தை மீண்டும் நடைபெறும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூறினால், நாங்கள் போட்டியிட மாட்டோம். திமுக நிா்ப்பந்தம் செய்தால், அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். எங்களுடைய சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனக் கூறியுள்ளோம் என்றாா் அவா். இன்று விசாரணை: இதனிடையே, பம்பரம் சின்னம் ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ தாக்கல் செய்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.
தொடர்புடையது

176 இடங்களில் போட்டியிடும் உதயசூரியன்!

4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

கட்சி சின்னத்தில் போட்டியிட மநீம மாவட்டச் செயலா்கள் வலியுறுத்தல்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


