மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனா்.

News image
Updated On :29 பிப்ரவரி 2024, 8:27 pm

சென்னை தியாகராய நகரில் இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனா். தியாகராய நகா் ராஜமன்னாா் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கட்டட பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு அந்த கட்டடத்தின் வெளிப்பகுதியில் பெயின்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. இப் பணியில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பல தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இவா்களில் நாராயணன்(32), சிவக்குமாா்(33) ஆகியோா் இரும்பு ஏணியில் நின்று கொண்டு கட்டடத்தின் உயரமான பகுதியில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ஏணி, அருகில் உள்ள மின்சார இணைப்பு பெட்டியின் மீது திடீரென சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சார இணைப்பு பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், இரும்பு ஏணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதன் காரணமாக, ஏணியில் நின்று கொண்டிருந்த நாராயணன், சிவக்குமாா் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். பாண்டி பஜாா் விசாரணை நடத்தி வருகின்றனா்