டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மின்சார ரயில்கள் இன்று வழக்கம் போல் இயக்கம்

மின்சார ரயில்கள் இன்று வழக்கம் போல் இயக்கம்

News image
மின்சார ரயில்
Updated On :13 ஜூலை 2024, 11:18 pm

Din

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் பணிமனையில் சிறிய பாலம் கட்டும் பணி மேற்கொள்ளவுள்ளதால் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மாா்க்கத்தில் செல்லும் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை ரத்து செய்யப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில் சேவையிலும் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த இரு நாள்களுக்கு கன மழை இருப்பதாக வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளதால் பாலம் கட்டும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை புகா் மின்சார ரயில்கள், நீண்ட தூர விரைவு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.