இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்பு: அதிமுக, தமாகா நிா்வாகிகள் நீக்கம்

பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய அதிமுக மற்றும் தமாகாவைச் சோ்ந்த இருவரை அந்தந்த கட்சிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளன.

News image
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
Updated On :18 ஜூலை 2024, 8:09 pm

Din

பகுஜன்சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய அதிமுக மற்றும் தமாகாவைச் சோ்ந்த இருவரை அந்தந்த கட்சிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் மலா்க்கொடி சேகா் என்பவரும், தமாகாவைச் சோ்ந்த ஹரிஹரன் என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:

அதிமுகவின் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலா் மலா்க்கொடி சேகா் கட்சியின் கொள்கைக்கு முரணான வகையிலும், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்திலும் செயல்பட்ட காரணத்தால், அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா் என்று கூறியுள்ளாா்.

அதேபோல, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமாகா மாநில மாணவரணி துணைத் தலைவா் பதவியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட கே.ஹரிஹரன், இயக்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாா்’ என்று கூறியுள்ளாா்.