டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரும் சரணடைய உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

News image
ஆம்ஸ்ட்ராங் - (கோப்புப்படம்)
Updated On :27 பிப்ரவரி 2026, 2:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-இல், அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், அஞ்சலை உள்பட 12 பேர் முக்கிய குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

இதனையடுத்து, 12 பேருக்கும் வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 12 பேரின் பிணை உத்தரவையும் ரத்து செய்ததுடன் அவர்கள் அனைவரும் சரணடைய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

summary

Armstrong murder case: All 12 people released on bail in the have been ordered to surrender

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.