திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!

ஓபிஎஸ் ஆதரவாளராகச் செயல்பட்ட வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில்

Former ADMK expelled leader Vellamandi N Natarajan re unites with ADMK today

வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்! - @AIADMKOfficial

Published On :27 பிப்ரவரி 2026, 7:34 pm IST

வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகிய இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டதையடுத்து அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்கியபோது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான வெல்லமண்டி என். நடராஜனும் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, அவர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் திடீரென திமுகவில் ஐக்கியமானார். இன்று (பிப். 27) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினைச் சந்தித்து அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இதனையடுத்து, அவரது சர்பு நிர்வாகிகள் குழப்பத்தில் இருந்த நிலையில், வெல்லமண்டி என். நடராஜன் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து அவர் தன்னை மீண்டும் அக்கட்சியில் இன்று (பிப். 27) இணைத்துக்கொண்டார்.

அதிமுக-வில் மாவட்டச் செயலராக 5 முறையும், அவைத் தலைவராக 16 ஆண்டுகளும் இருந்தவர் வெல்லமண்டி என். நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Former ADMK expelled leader Vellamandi N Natarajan re unites with ADMK today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.